Skip to main content

சமநிலையில் இருக்கும் கேப்டன் vs வைஸ் கேப்டன்... முன்னேறப்போவது யார்..? ஐ.பி.எல். போட்டி #31

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
IPL

ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் அணிகளின் பட்டியலில் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் எப்போதும் இடம் உண்டு. அது என்னவோ பெங்களூரு அணி எவ்வுளவு தான் முட்டி மோதினாலும் அவர்களுக்கு கோப்பை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால் மும்பையை பொறுத்த வரை என்னதான் ஆரம்ப லீக் ஆட்டங்களில் சொதப்பினாலும் இறுதி கட்ட ஆட்டங்களில் இருக்க பிடித்து தொடர் வெற்றிகள் மூலம் கோப்பையை கை பற்றி விடுகிறது. இப்படி இருவேறு முனைகளில் உள்ள அணிகளுக்கும் இந்த ஆண்டு 11வது ஐபில் போட்டிகளில் எதிர்பார்த்தது போலவே அரங்கேறி வருகிறது.

மும்பை அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றியும். பெங்களூரு அணியும் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றியும் பெற்று சமநிலை வகிக்கின்றன. ஏற்கனவே மும்பை, பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய 1வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. என்னதான் பெங்களூரு அணி பேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்தாலும் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் எப்போதும் போல சொதப்பி வருகிறது. கடந்த இரண்டு ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

 

மும்பையை பொறுத்தவரை எப்போதும் போல தோல்விகளிலேயே இந்த ஐபில் சீசனை ஆரம்பித்துள்ளது. இருந்தும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் மூலம் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், ஆகியோர் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளனர். இதனால் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் நோக்கில் நம்பிக்கையுடன் களம் காணும். மேலும் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் இனி வரும் ஆட்டங்களில் 7ல் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும் என்பதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

பெங்களூருவின் தூண்களாக திகழும் கோலியும், டிவில்லியர்ஸும் நல்ல பார்மில் உள்ளனர். காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் களம் திரும்ப வாய்ப்புள்ளதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அது அமையும். மேலும் முந்தய லீக் ஆட்டத்தில் மும்பையிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அண தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஜெயிக்க போவது இந்திய அணியின் கேப்டனா...? அல்லது துணை கேப்டனா...? பொறுத்திருந்து பாப்போம்.

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.