ADVERTISEMENT

புலிக்கு தண்ணீ காட்டிய வாத்து... வைரலாகும் போட்டோ!

06:31 AM Jan 28, 2020 | suthakar@nakkh…

வேட்டையாடுவதில் புலி சிங்கத்தை விட அதிக வல்லமை பெற்றது. இந்நிலையில் புலி வேட்டையாடுவது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆனால் இந்த முறை புலி பல முறை முயன்றும் தோல்வியே அதற்கு மிஞ்சியது. புலி வேட்டையாட முயன்ற விலங்கு வேறு எதுவுமில்லை, சாதாரண வாத்தைதான் பல மணி நேரம் வேட்டையாட புலி முயன்றுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


ஆனால், தண்ணீரில் ராஜ்ஜியம் நடத்தும் வாத்து, பலமுறை தொடர்ந்து புலிகள் கூட்டம் அதனை வேட்டையாட முயன்றும் அவை அனைத்திற்கும் தொடர்ந்து தண்ணீ காட்டியது. காட்டில் வேண்டுமானால் நீங்கள் சூரனாக இருக்கலாம், தண்ணீரில் நான்தான் ராஜா என்று சொல்வது போல இருக்கிறது வாத்தின் செயல்பாடுகள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT