Skip to main content

சுற்றித்திரிந்த சிறுத்தை... கூண்டுவைத்து பிடித்த வனத்துறை!!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம்  என்னும் கிராமப்பகுதி உள்ளது.   இங்கு விவசாயத் தொழில் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது. கிராமப் பகுதியையொட்டி கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு என்னும் வனப்பகுதி உள்ளது.


 

Panthers roaming around...Forest Department action



கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து வனப்பகுதியை யொட்டியுள்ள மோத்தேபாளையம் கிராமத்திற்குள் புகும் சிறுத்தை தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்துக்குதறி கொன்று வந்தது. சிறுத்தையின் அட்டகாசம் மற்றும் நடமாட்டம் கிராம மக்களிடையே ஒருவிதஅச்சத்தை ஏற்படுத்தியது. பகல்,இரவு நேரங்களில் நடமாட பயந்து வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் விவசாயத்தொழிலும் பாதிக்கப்பட்டது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராமமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

 

தானியங்கி கேமரா வைத்து கண்காணிப்பு :

 

இதனையடுத்து சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக்கண்டறிய தானியங்கி கேமராவை தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்தனர்.கேமராவில் பதிவான சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட தோட்டத்தை யொட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று மாலை கூண்டை வைத்தனர். இரண்டாக  பிரிக்கப்பட்ட கூண்டின் பின்புறம் ஒரு ஆட்டை கட்டி வைத்து கூண்டை செடி,கொடிகள்மற்றும் இலை,தழைகளால் மூடி வைத்தனர்.வனத்துறையினர் தீவிர கண்காணிப்பும் செலுத்தி வந்தனர்.
 

 

Panthers roaming around...Forest Department action



இந்தநிலையில் இன்று காலை கூண்டருகே சென்று பார்த்த போது கூண்டிற்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டது. கூண்டிற்குள் பார்த்த போது 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைக்குட்டி அங்கும்,இங்கும் ஆக்ரோஷத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிறுத்தை சிக்கிய கூண்டை லாரியில் பத்திரமாக ஏற்றினர்.



அதன்பின்னர்பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கூண்டைத்திறந்து விட்டனர்.கூண்டைத்திறந்ததும் சிறுத்தை வனப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து பாய்ந்தோடி மறைந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.முன்பொரு முறை இதே மோத்தேபாளையம் கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை சிறுமுகை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.