Skip to main content

உடல் ஒட்டி பிறந்த உயிரில்லா தங்கை!விடுதலைக்காக காத்திருக்கும் வினோத சிறுமி

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

 

child

 

 

 

பிலிப்பைன்ஸில் 14 வயது சிறுமி ஒருவருக்கு வயிற்று பகுதியில் கைகள் போன்ற உறுப்பு வளரந்துவந்துள்ள வினோதம் நடந்துள்ளது.

 

பிலிப்பைன்ஸில்  எலிகன்  பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ். 14 வயது சிறுமியான இவர் பிறக்கும் பொழுதே மார்பு பகுதியில் கைகள் போன்ற உறுப்பும் சேர்ந்து பிறந்துள்ளார். இந்நிலையில் இதனால் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து வந்த வெரோனிகா கிராம மக்கள் உதவியுடன் தாய்லாந்திற்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் அந்த உறுப்புகளை நீக்க உள்ளார்.

 

இதுபற்றி அந்த சிறுமி கூறுகையில்,  நான் பிறக்கும்பொழுதே  என் வயிற்று பகுதியில் அந்த கை போன்ற உறுப்பு இருந்தது. நான் வளர வளர அதுவும் வளர்ந்தது. அதனால் மிகவும் சிரமப்பட்டு வந்தேன் சில நேரம் இரத்தம் கூட வரும் ஆனால் கிராம மக்களின் உதவியுடன் தற்போது அந்த கஷ்டங்கள் தீரப்போகிறது எனக்கூறியுள்ளார்.

 

child

 

 

 

சிறுமியின் தாய் இதுபற்றி கூறுகையில், இவள் பிறக்கும் முன் நான் இரட்டை குழந்தைதான் பிறக்கப்போகிறது என நினைத்தேன். ஆனால் உள்ளே இருந்த இரட்டை குழந்தைகளில் இவளது தங்கை சரியாக வளர சக்தி இல்லாததால் வெரோனிகா உடலோடு ஒட்டி வளர்த்துள்ளார். அதுதான் அந்த கைகள் போன்ற உறுப்பு. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இவ்வளவு நாட்கள்  வெரோனிகா வோடு ஒட்டி வாழ்ந்த அவளது தங்கை நீக்கப்படபோகிறாள் என குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.