Skip to main content

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதிக்கம்!!!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

forbes

 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர்.

 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிடும் உலக பணக்காரர் பட்டியலுக்காக பலர் ஆர்வமாகக் காத்திருப்பர். கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இந்தாண்டுக்கான பட்டியல் வெளியானது. தற்போது 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆண்டுகள் தோறும் இப்பத்திரிகைகள் வெளியானாலும், கரோனா அச்சுறுத்தல் மற்றும் பொருளாதரா பாதிப்பு நிறைந்த இந்தச் சூழலில் வெளியானதால் இப்பட்டியல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு இப்பட்டியலில் முன்னணியில் இருந்த பலரது சொத்து மதிப்புகள் தற்போது அதிக பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது.

 

இந்தப் பட்டியலில் 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் 179 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ் 111 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே 'மார்க் ஜூக்பெர்க்', 'வாரன் பஃப்பட்', 'லேரி எல்லிசன்' ஆகியோர் உள்ளனர். 

 

இந்தப் பட்டியலில் அமெரிக்காவாழ் இந்தியர்களான ஜே சவுந்திரி, ரோமேஷ் வத்வானி, நிராஜ் ஷா, வினோத் கோஸ்லா, கவிதாரிக் ஸ்ரீராம், ராகேஷ் கேங்வால், அனில் புஸ்ரி ஆகிய ஏழு பேர் இடம்பிடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ராஷ்மிகா!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Rashmika Mandanna in 2024 Forbes India list of 30 under 30

ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பிரிவான ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ 2014 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் இருக்கும் நிலையில், பொழுதுபோக்கு துறையில் ராஷ்மிகா மந்தனா(27) மற்றும் ராதிகா மதன் (28) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இசைத் துறையில் அதிதி சைகல் (25) என்கிற பாடகி இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் கடந்த வருடம் வாரிசு, மிஷின் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Next Story

உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரர் கவுதம் அதானி

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Gautham Adani is the 2nd richest person in the world!

 

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். 

 

ஃபோர்ப்ஸ் இதழின் பெருமை பணக்காரர் பட்டியலின் படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார் அதானி. 

 

அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், சுரங்கம், உள் கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.