ADVERTISEMENT
ADVERTISEMENT
உகாண்டா நாடாளுமன்றத்தில் பேசிய நரேந்திர மோடி, ஜிஞ்சா என்னும் இடத்தில் மஹாத்மா காந்திக்கு நினைவு இல்லம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி," காந்தியின் சிலை இருக்கும் புனித இடமான ஜிஞ்சாவில், நாங்கள் நினைவு இல்லம் ஒன்றை கட்ட இருக்கிறோம். அவருடைய 150ஆவது பிறந்தநாளுக்கு ஏற்ற ஒரு மரியாதையாக இருக்கும். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க ஆப்ரிக்காவும் ஒருவகையில் இணைந்துள்ளது"என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வருங்காலத்தின் நம்பிக்கைகளாக இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் தொடக்கநிலையில் தற்போது இருக்கிறது. ஆப்ரிக்காவின் விடுதலைக்காக இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments