Skip to main content

“ஸ்டாலினை ஏன் விமர்சிக்கிறார் தமிழிசை? மோடி தமிழகம் வந்தால்..?”-பா.ஜ.க.வை விளாசிய முத்தரசன்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இன்று விருதுநகர் வந்திருந்தார் அக்கட்சியின் மாநில செயலாளரான முத்தரசன். செய்தியாளர் சந்திப்பில் அவர்,

 

Mudrasaran

 

“அரசியல் ஆதாயத்துக்காக உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. கொடநாட்டில் நடந்த கொலைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருக்க வேண்டும். கண்ணும் காதும் இருக்கிறது தமிழிசைக்கு. தினமும் செய்தித்தாள் படிப்பார்: தொலைக்காட்சி பார்ப்பார் என்று கருதுகிறேன். ஸ்டாலின்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் சென்று பார்வையிட்டார். கிராமசபை கூட்டங்களில் ஸ்டாலின் கலந்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்கும் தமிழிசை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் அவர் சென்று பார்த்தாரா? தமிழக மக்கள் நலனில் தமிழிசைக்கு அக்கறை இருந்தால், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சென்று பிரதமரைச் சந்தித்திருக்க வேண்டும். தமிழக அரசு கேட்ட ரூ.1500 கோடி நிவாரணத் தொகையைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். இதைச் செய்யாத அவர் ஏன் மற்றவர்களின் செயல்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்? 

 

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து.. சில இடங்களுக்குக் காரில் சென்றிருந்தால், கஜா புயல் சேதப் பகுதிகளைப் பார்வையிட வராதது குறித்தும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளான கருப்புப் பணத்தை மீட்பது குறித்தும், இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பியிருப்பார்கள் பொதுமக்கள். கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று நேரடியாகவே கேட்டிருப்பார்கள். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆலை உரிமையாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். பொன் ராதாகிருஷ்ணன் முதலில் அவரது பலவீனத்தைப் பார்க்கட்டும். எங்கள் அணி பலமாகத்தான் இருக்கிறது. மற்ற அணிகளின் பலம் என்னவென்பதை தேர்தலின் போது சந்திக்கத்தானே போகிறோம்.” என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.