ADVERTISEMENT

3 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்; மோசடி வழக்கில் போலீசார் விசாரணை

04:56 PM Nov 18, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் மூன்று பெண்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட இளைஞர் மோசடி செய்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள காரணம்பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் போஸ். இவர் திருமணமாகி நந்தினி என்பவருடன் வசித்து வந்தார். .இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பிரசாந்தி என்ற பெண்ணுடனும், ஆழியாரைச் சேர்ந்த குளோரி என்று பெண்ணுடனும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரிடமும் பல முறைகளில் பணத்தைப் பெற்று வந்த ஓட்டுநர், அவர்களை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக பிரசாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரசாந்திக்கு உரிய பணத்தை கொடுக்குமாறு ஓட்டுநர் போஸிடம் அறிவுறுத்தினர்.

இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT