ADVERTISEMENT

சொந்த ஊரில் நடிகர் யோகிபாபுவின் திருமணம்: –ஊர்க்காரர்களுக்கே அழைப்பில்லையாம்...

10:26 AM Feb 06, 2020 | rajavel

ADVERTISEMENT


தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட சிலப்படங்களில் நடித்துள்ளார். இவர் திடீரென தனக்கு திருமணமாகிவிட்டதுயென சமூகவளைத்தளம் வழியாக புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டம், பட்டு நகரான ஆரணிக்கு அருகில் பெரணமல்லூர் அருகில் உள்ள வாழைப்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நகரம்பேர் கிராமத்தை சேர்ந்தவர் யோகிபாபு. இவரது அம்மா தனது மூத்த மகனுடன் கிராமத்தில் தான் உள்ளார். இவரது உடன்பிறந்த அண்ணன் ராஜா குறிச்சொல்லும் சாமியாராக கிராமத்திலேயே உள்ளார்.




இந்நிலையில் பிப்ரவரி 4ந் தேதி சென்னையை சேர்ந்த தனது தோழியும், காதலியுமான மருத்துவர் மஞ்சு பார்கவியுடன் காரில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். கிராமத்துக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தனது குடும்பத்தாரிடம் திருமண ஏற்பாடுகளை செய்யச்சொல்லியுள்ளார்.


இதனால் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலான மாரியம்மன் கோயிலில் திருமண ஏற்பாடுகளை வெகு சிம்பளாக ஏற்பாடு செய்துள்ளனர். பிப்ரவரி மஞ்சு பார்கவி குடும்பத்தினரை ஆரணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளார். பிப்ரவரி 5ந்தேதி காலை தனது கிராமத்து நண்பர்கள், குடும்பத்தினர், தன்னுடன் சென்னையில் உள்ள சில நண்பர்கள் முன்னிலையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி தாலிக்கட்டியுள்ளார். கோயிலை மணமக்கள் வலம் வந்துள்ளனர். கிராமத்தில் உள்ளவர்களுக்கு இந்த திருமணம் குறித்து பெரியதாக கூறவில்லை.



திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரியவந்து ஆரணி நகரில் உள்ள செய்தியாளர்கள் அவசரமாக அங்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றபோது, யோகிபாபுவின் உத்தரவின் பேரில் அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும் யோகிபாபுவின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பி வந்துள்ளனர். கோயிலில் திருமணம் முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு மனைவியுடன் வந்து நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார், குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். திருமணம் முடிந்ததும் உடனடியாக தனது மனைவியுடன் கார் மூலமாக சென்னைக்கு சென்றுவிட்டார்.

தங்கள் ஊரில் தங்களுக்கு தெரியாமல் ஒரு பிரபலத்தின் திருமணம் நடந்துள்ளதே என ஆச்சர்யமும், அதிசயமுமாய் பேசிக்கொண்டுள்ளனர் அக்கிராமத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT