ADVERTISEMENT
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா தொற்று பரவலும் குறைந்து வருவதால் முழுமையான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ADVERTISEMENT
அதே நேரத்தில் பட்டாசுக் கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை வழக்கம் போல தீயணைப்புத்துறை விதித்துள்ளது. அந்த வகையில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Show comments