ADVERTISEMENT
அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், அக்கம்பக்க கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அடிப்பட்ட பெண்மணியை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
ADVERTISEMENT
இது குறித்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுக்கா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும் எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments