விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியில் வசித்துவந்தவர் ஜெய்ஹிந்தேவி.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இவர் விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் எஸ்ஐயாக பணி செய்து இன்ஸ்பெக்டராக பதவிஉயர்வு பெற்றவர். இவர் தற்போது நெய்வேல் தெர்மல் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருகிறார்.
இந்தநிலையில் ஜெய்ஹிந்தேவி குடியிருந்த காவேரிபாக்கம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. தகவலறிந்த திண்டிவனம் போலீசார் ஜெய்கிந்தேவி உடலை கைப்பற்றியதோடு அவரது தற்கொலைக்கு காரணம் என்னவென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெண் காவல்துறை ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
Show comments