Skip to main content

உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மர்ம மரணம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

நாட்டையே உலுக்கிய , நிர்பையா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். ஆனாலும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதன் தொடர்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குழந்தை சந்தேகமானநிலையில் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Villupuram incident - police investigation

 



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே , பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வசித்து வந்தார் கோமதி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளநிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

இதையடுத்து புதுச்சேரியை  சேர்ந்த ஒருவரை கோமதி காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்பு இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து அவரின் முதல் இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளது. 9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமியரும் சொந்த ஊரிலேயே பள்ளியில் படித்தும் வந்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் உறவுக்காரர் கடந்த ஓராண்டாக இரு சிறுமியரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் , குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு சிறுமியரின் தாய் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, தங்களுக்கு நடந்த கொடூரங்களை தாயிடம் கூறி குழந்தைகள் அழுதுள்ளது. உறவுக்காரர்களே தனது குழந்தையின் வாழ்கையை அழித்துவிட்டார்களே என்று அதிர்ச்சி அடைந்த கோமதி குழந்தைகளை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியி்ல் சேர்த்து விட்டார் .

 



இந்த விவகாரத்தில் கோமதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் சொந்தங்கள் மத்தியில் கோமதிக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் உறவினர்களின் மிரட்டலால் கோமதி புகார் எதுவும் கொடுக்கவில்லை. சில நாட்களாக மூத்த சிறுமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் , பள்ளியில் ஆசிரியை அதைக் கவனித்துள்ளார். சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை அவர் சொல்லவே அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக பள்ளி நிர்வாகம் மூலம் புதுச்சேரி சைல்டு லைனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் தெரிவித்து அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை எனத் தெரியவரவே, சிறுமியர் இருவரும் புதுசேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு ,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட 14 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திண்டிவனம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஜாமினில் வெளியே  வந்து உள்ளார்கள். இந்தநிலையில் சிறுமி திடீர் என்று தற்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவர் மிரட்டலாலும், வழக்கில் தண்டனை கிடைத்துவிடுமோ என்பதால் அதில் இருந்து தப்பிக்க குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதபரிசோதனை அறிகை வந்த பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.