Skip to main content

குண்டு வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை... குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்...!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

விழுப்புரம் பாண்டி சாலையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை செய்து வந்தார் சீனிவாசன். கடந்த 4ஆம் தேதி காலை 11.30 மணி வாக்கில் கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் சீனிவாசன் இருந்த அறைக்கு சென்று அவர் மீது வெடிகுண்டு வீசி அவரை நிலை குலையசெய்து அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

 

Villupuram Petrol Punk incident - police investigation

 



இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சம்பவம் நடந்த உடனே மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, "பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாஷிடம் பிரபல ரவுடி அசார் என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்காமல ரவுடிகள் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அந்த ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷை கொலை செய்ய வந்துவிட்டு ஆள் மாற்றி சீனிவாசனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தனர்.

 



இதனிடையே கொலையாளிகள் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கார், கொலைக்கு பயன்படுத்திய அறிவாள் ஆகியவற்றை பேரங்கியூர் பகுதியில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மாவட்ட எஸ்பி  ஜெயகுமார் கூறுகையில், "திமுக நகர செயலாளர் செல்வராஜ் கொலை வழக்கில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளியான அசார் இக்கொலை சம்பவத்தினை நிகழ்த்தியிருக்கிறார் என தெரியவருகிறது. அசார் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணம் கேட்டு மிரட்டியத சம்பந்தமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று கருத சந்தேகத்திற்கிடமாக உள்ளது காரணம்.

அந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு பழிவாங்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அசார்  கூட்டாளிகள் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரகாஷிடம் பத்தாயிரம் பணம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் கொலை நடந்தபோது சீனிவாசன் முன்பு இருந்த மேஜையில் 28 லட்சம் பணம் இருந்துள்ளது அதை கொலையாளிகள் எடுத்து செல்லவில்லை. அசார் முக்கிய குற்றவாளி அவருடன் இக்கொலையில் 7 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.

 



மேலும் சிறையில் உள்ள ரவுடி இருசப்பன் அவரது உறவினர் ராஜா ஆகியோருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது. புதுச்சேரியில் ரவுடிகள் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் போன்ற கலாச்சாரத்தை விழுப்புரத்திலும் கொண்டுவர பார்க்கிறார்களா என்ற வகையில் விசாரணை செய்து வருகிறோம். பிரகாஷ் என நினைத்து சீனிவாசன்  கொல்லப்பட்டாரா அல்லது பிரகாஷ் மிரட்டும் நோக்கத்தில்  சீனிவாசனை கொன்றார்களா என்பது பற்றி குற்றவாளிகளை பிடித்தவுடன்  அவர்களிடம் விசாரணை நடத்தினால் தெரியவரும்" என்றார்.

இந்நிலையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான முயற்சியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளது. அசார் விசாரணையின் முடிவில் தான் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்கிறது காவல்துறை. 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.