தொலைந்து மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் 3 ஆண்டுகளாக இந்த புகாரின் அடிப்படையில் சுரேஷை போலீசார் தேடி வந்தனர். இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் வீடியோ ஒன்றில் சுரேஷ் போன்ற நபர் ஒருவர் திருநங்கையுடன் ஜோடியாக ஆடிப்பாடும் வீடியோக்கள் வெளியானது. இதைக் கண்ட ஜெயப்பிரதாவின் உறவினர்கள் உனது கணவன் திருநங்கை ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான ஆதாரமாக அந்த வீடியோவையும் அவரிடம் காட்டினர். இதனையடுத்து டிக் டாக் வீடியோவில் இருந்தது சுரேஷ் தான் என உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனே இந்த தகவலை விழுப்புரம் காவல் நிலையத்திற்கு ஜெயப்பிரதா கொண்டு சென்றார்.
திருநங்கைகள் குழு அளித்த தகவலின் பேரில் ஓசூர் சென்று விசாரித்தபோது திருநங்கையை திருமணம் செய்து கொண்டு சுரேஷ் குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை மீட்டு வந்த காவல்துறையினர் அவை அவரை ஜெயப்பிரதா விடம் சேர்த்து வைத்தனர்.