ADVERTISEMENT

கழிவு நீர் வெளியேற்றம்; மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

10:57 PM Dec 14, 2023 | prabukumar@nak…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்குச் சொந்தமான மில் ஜவுளி ஆலையிலிருந்து முறைகேடாகக் குழாய் அமைத்துக் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது. இது குறித்துக் கடந்த 9 ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்தப் புகாரைத் தொடர்ந்து கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் சட்டவிரோதமாகக் கழிவு நீரை வெளியேற்றியே ஜவுளி ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் கடந்த 3 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை 7 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT