ADVERTISEMENT

தடம் மாறிய மனைவிகள்... நண்பர்களுக்குள் மோதல்... கொலை - சிறை...!

03:13 PM Feb 25, 2020 | Anonymous (not verified)

விழுப்புரத்தில் ரவுடி ராஜா என்கிற காஜா கடந்த 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டான். இக்கொலை சம்பந்தமாக போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ராஜாவின் நண்பர்கள் லாலி கார்த்திக், வினோத் குமார் ஆகிய இருவரையும் போலீசார் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



போலீசாரிடம் பிடிபட்ட லாலி கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு கொலை வழக்கில் மூவரும் சிறை சென்று சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டோம். இந்தநிலையில் நான் வீட்டில் இல்லாத போது என் வீட்டிற்கு ராஜா அடிக்கடி வருவான். அப்படி வரும்போது என் மனைவியிடம் பேசுவதும் சிரிப்பதும் அடிக்கடி சந்திப்பதுமாக இருந்த நிலையில், அது இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் ராஜா மீது நான் விரோதத்தில் இருந்தேன். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தேன்.

ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மனைவியைப் பிரிந்து இருந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சாலாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அந்த வீட்டிற்கு எங்கள் நண்பன் வினோத்குமார் அடிக்கடி சென்று வந்தார். அப்போது ராஜாவின் இரண்டாவது மனைவியுடன் வினோத்திற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் வினோத்தை தீர்த்துக்கட்ட ராஜா திட்டமிட்டு வந்தான். இப்படி இருவரும் ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் கூட அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தோம்.



இந்நிலையில் என் மனைவியை பிரசவத்திற்காக பையூரில் உள்ள எனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டேன். அந்த நிலையில் ராஜாவின் இரண்டாவது மனைவிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த அவனது மனைவியை பார்க்க நாங்கள் மூவரும் கடந்த 22ஆம் தேதி சென்றோம். ராஜா மனைவியையும் குழந்தை பார்த்துவிட்டு திரும்பும்போது மதுபாட்டில்கள் சைடிஸ் வாங்கிக்கொண்டு என் வீட்டில் என் மனைவி இல்லை என்பதால் மூவரும் அங்கு மது அருந்தி ஜாலியாக சாப்பிடலாம் என கூறி ராஜாவை நானும் வினோத்தும் என் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

வீட்டில் மூவரும் மது அருந்தினோம். அதற்கு முன்பே வினோத்திடம் என் மனைவியோடு ராஜா கள்ளத்தொடர்பில் உள்ளதால் என்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். அதேபோல் நீ ராஜாவின் மனைவியோடு கள்ள தொடர்பு வைத்து உள்ளதால் அவன் உன்னை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளான். எனவே நமது இருவருக்கும் பொது எதிரியாக உள்ள ராஜாவை தீர்த்துக் கட்டினால் நம் இருவருக்கும் நிம்மதி என்று டீலிங் பேசி முடிவு செய்தோம். வினோத்தும் இந்த டீலிங் அருமையாக உள்ளது என்று சந்தோஷம் அடைந்தான்.

பின்னர் திட்டமிட்டபடி ராஜாவை மது அருந்த வைத்து போதை அதிகமானதும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தோம். ராஜாவின் உடலை வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையின் போதுத நாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த தாலுக்கா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட எஸ்பி. ஜெயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT