Skip to main content

குடமுழுக்கு விழாவில் திருட்டு; 3 பெண்கள் கைது 

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

vilupuram district temple function police 

 

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி, பெண்களிடம் செயின் பறிக்கும் நோக்கத்துடன் சுற்றி வந்துள்ளனர் மூன்று பெண்கள்.  இந்தப் பெண்கள் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடமிருந்து பர்ஸ் மற்றும் செயின் ஆகியவற்றைத் திருட முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மோகன்ராஜ் மூன்று பெண்களையும் மடக்கிப் பிடித்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

இவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் மனைவி மேகலா(வயது 45),  ஜோசப் மனைவி மஞ்சு (வயது 47), ஐயப்பன் மனைவி காளியம்மாள் (வயது 46) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் இதுபோன்று குடமுழுக்கு விழாக்கள் மற்றும் கோயில் தேர் திருவிழாக்களில் கூடும் பெண்கள் கூட்டத்தில் புகுந்து செயின் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் போலீசார் மூவரையும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

சில தினங்களுக்கு முன்பு மயிலம் அருகே நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடம் செயின் பறிக்கும் போது பிடிபட்ட ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த செயின் பறிக்கும் சம்பவத்தில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.