ADVERTISEMENT

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் வேன் விபத்தில் படுகாயம்!  

11:08 AM Dec 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரது தந்தை நடராஜன் என்பவர் அவரது சொந்த ஊரான கொட்டாரம் கிராமத்தில் இறந்துபோனார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக செல்வியின் உறவினர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் ம.புடையூரிலிருந்து ஒரு வேனில் புறப்பட்டுச் சென்று நடராஜன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, மீண்டும் தங்கள் ஊரான ம.புடையூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயம், திட்டக்குடியை அடுத்த ஆவட்டி கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் வேனை ஒதுக்கிச் செலுத்த முயன்றுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த கவிதா, சுந்தரி, செல்வமணி, மேகலா, ஜெயலட்சுமி, செல்லம்மாள், கலையரசி உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வேன் மோதியதில் ராஜி என்பவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்று சேர்த்தனர்.

இதில் நான்கு பேரை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT