ADVERTISEMENT

நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ எம்.பி! 

03:35 PM Oct 02, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான நல்லக்கண்ணு, கடுமையான காய்ச்சல் காரணமாக, நேற்று (01/10/2022) இரவு சென்னை ராஜீவ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை தனி வார்டில் வைத்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வரும் நல்லக்கண்ணுவை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, இன்று (02/10/2022) மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு குறித்து மருத்துவர்களிடம் வைகோ எம்.பி. கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ எம்.பி., நல்லக்கண்ணு நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT