விழுப்புரம் மாவட்டம், உளூந்தூர்பேட்டை அருகே தேன்குணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டை தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உளூந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமார் 25ல் இருந்து 30 வயது வரை உள்ள ஆண் சடலம் யார் என்று கிராமத்தினரிடம் விசாரித்துள்ளனர். அடையாளம் தெரியாத காரணத்தினால் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கைப்பற்றப்பட்ட ஆணின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments