Skip to main content

பெசன்ட் நகர் இல்லத்தில் நடராஜன் உடல்! பொதுமக்கள் அஞ்சலி

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

 

nadarajan


சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.  நள்ளிரவு 1.30 மணிக்கு நடராஜன் உயிரிழந்தார். நடராஜனின் உடல் எம்பார்மிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எம்பார்மிங் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.  அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகர் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

 

காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படும்.  அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதற்காகவாவது நான் பணம் வாங்கியாக வேண்டும்” - மைதானம் குறித்து மனம் திறக்கும் நடராஜன்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Natarajan spoke about the stadium he built

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

 

இதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரம் யோகிபாபுவும் இவ்விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “2010 ஆம் ஆண்டு நாங்கள் பேசிக்கொண்டு இருந்த கனவு நினைவாகும் போது மிக ஆச்சர்யமாக உள்ளது.  மிக பெருமையாக உள்ளது. இங்கிருந்து அதிகமான வீரர்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். 

 

கிரிக்கெட் பிரபலங்கள் அதிகமானோர் வந்துள்ளார்கள். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணம். 14 வயது முதல் 19 வயதுடையவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் தான் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். இது இலவசமாக செய்யவில்லை. கட்டணம் வசூலிக்கிறோம். இது எனக்காக நான் செய்து கொள்ளவில்லை. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். மைதானத்தை பராமரிப்பது எவ்வளவு கடினம் என உங்களுக்கே தெரியும். அதற்காகவாவது பணம் வாங்கியாக வேண்டும்” என்றார்.

 

 

 

Next Story

"கடவுள் ஆசீர்வாதத்தால் கண்டிப்பா எனது ஆசை நடக்கும்" - நடராஜன் விழாவில் யோகி பாபு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

yogi babu press meet at natarajan cricket ground launch

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. 

 

சிறப்பு விருந்தினராக வருகை தந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவரோடு நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த யோகி பாபு, "தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. அது காலம் காலமாக நடந்துக்கிட்டு வருவது தான். ஆனால் இப்போது முதல் முறையாக நடராஜன் வளர்ந்து வர கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய சப்போர்ட் பண்ணியிருக்கார். இதன் மூலம் நிறைய வீரர்கள் வரவேண்டும் என்பது எனது ஆசை. 

 

இந்த மைதானத்தை பார்க்கும் போது நாமும் இதுபோன்று ஒரு மைதானம் உருவாக்கி நிறைய பேரை உருவாக்கணும்னு தோன்றுகிறது. கண்டிப்பா இந்த ஆசை கடவுள் ஆசீர்வாதத்தில் நடக்கும் என நம்புகிறேன். நானும் அடுத்ததாக கிரிக்கெட்டை மையப்படுத்தி தான் ஒரு படம் பண்ணவுள்ளேன். அதனை 'பொம்மை நாயகி' பட இயக்குநர் தான் இயக்குகிறார்" என்றார்.