தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்த கஞ்சா மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆபரேஷன் 2.0- வை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து மதுரை சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக பேப்பர் கொண்டு செல்லும் லாரியில் மறைத்து கஞ்சாவை கடத்திச் செல்வதாக காவல்துறை எஸ்.பி. ரோஹித் கிடைத்த ரகசிய தகவலின் படி, திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் டி.எஸ்.பி. புகழேந்தி மேற்பார்வையில் காவல்துறை ஆய்வாளர் சத்யா தலைமையில் வேடச்சந்தூர் காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.