குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

Madurai Youngster arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் அத்துமீறல்களை கண்டு பிடித்து, அதனை தடுக்க தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் வல்லுநர்கள் இணையதளம், வாட்ச் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பற்றி ஆபாச படங்களை, பதிவேற்றம், பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்ந்து வருபவர்களை கண்டு அறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து சென்னை, திருச்சி கோவையில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்த சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த விவகாரத்தில் மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி புக்கிங் ஆபீசில் பணிபுரியும் குமார் என்ற 40 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.