கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரது மகன் விஜய் (18), புலேந்திரன் என்பவரின் மகன் ஸ்டீபன் (20) ஆகிய இவரும் செல்ஃபோன் மூலம் இணையதளத்தில் உள்ள யூ டியூப் சேனலில் பிளாஸ்டிக் குழாயைப் பயன்படுத்தி பறவைகள் மற்றும் குருவிகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி போன்ற சாதனத்தை தயாரித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆலடி காவல்நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதையடுத்து காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அபாயகரமான நாட்டுத் துப்பாக்கி போன்று அவர்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் 'இளைஞர்கள் இணையதளத்தில் உள்ள இதுபோன்று அபாயகரமான காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்றும், தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம்' என்றும் காவல்துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர்.