ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை கூட்டம்

06:00 PM Feb 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் விமான நிலைய குழுவின் தலைவரான திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த குழுவில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசியப் பாதுகாப்பு படை, குடியேற்றப் பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT