Skip to main content

விமான நிலைய தங்க கடத்தல் பின்னணியில் திருச்சி ஆளும் கட்சி பிரமுகர்!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டுகளுக்கும் சென்னை, பெங்களுரு போன்ற பெருநகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
 

trichy airport issue


தமிழகத்தில் வேறு எந்த விமானநிலையத்திலும் இல்லாத வகையில் திருச்சியில் தான் அதிக அளவில் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இது அத்தனையும் அதிகாரிகள் துணையில்லாமல் நடைபெறாது என்பதை உறுதி செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்து திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இருந்து 40 அதிகாரிகள் தீடிரென மலேசியாவில் இருந்து வந்த 3 விமானங்கள், ஷார்ஷாவில் இருந்து வந்த ஒரு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களில் இருந்து வந்து இறங்கிய 150 பயணிகளை விடிய விடிய விசாரணை வலையத்தில் வைத்திருந்தார்கள்.

இவர்கள் அனைவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 13 கோடி மதிப்புள்ள 33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது இல்லாமல் 3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சோதனை மற்றும் விசாரணை முடித்து அனுப்பி வைத்தனர். இதில் தங்கம் கடத்தி வந்த 25 பேரை மட்டும் தனியே அழைத்து தொடர் விசாரணை நடத்தின்ர். அதில் அவர்கள் 25 பேருமே குருவிகள் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.

குருவிகள் கொண்டு வந்து கொடுக்கும் தங்கத்தை வாங்குவதற்கு வெளியே நின்று கொண்டிருந்த 15 வியாரிகளையும் பிடித்து விசாரணை செய்து அவர்கள் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து அதிகாரிகள் அழைக்கும் போது கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும் என்று நிபர்ந்தனையுடன் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த தங்க கடத்தலுக்கு இரண்டு முக்கிய அதிகாரிகளின் சிக்கியிருக்கிறார்கள். அவர்களின் வங்கி எண்களில் தங்கம் வியாபாரிகள் பணம் பரிமாற்றம் செய்தற்கான ஆவணங்கள் சிக்கியிருக்கிறதாம்.

இதே போல தங்கம் கொண்டு வந்த குருவிகளில் 4 பேர் திருச்சியில் ஆளும்கட்சியின் பகுதி செயலாளர் ஒருவரின் பெயரை சொல்லியிருக்கிறார்கள். அவருக்காகத் தான் சென்று வந்தோம் என்று சொன்னதும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிசெயலாளரான அவர், கடந்த இரண்டு வருடமாக தங்கம் விற்பனை பர்மா பஜாரில் செய்து வருகிறாராம். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கூடிக்கொண்டே இருப்பதால் போலிஸ் துணையோடு இந்த வியாபாரம் செய்து வருகிறாராம்.

இந்த பகுதி செயலாளர், கட்சியில் உள்ள இன்னொரு முக்கிய பெண்மணிக்கு வங்கி கடன் பிரச்சனையில் விமான நிலைய பகுதியில் ஒரு வீட்டை 55 இலட்சத்திற்கு பேரம் பேசி 5 இலட்சம் மட்டுமே கொடுத்து அந்த வீட்டை அந்த பெண்மணி கஷ்டடியில் வாங்கி கொடுத்து விட்டாராம். இந்த பகுதி செயலாளர் தனக்காக இதே விமானநிலைய பகுதியில் ஒரு காலி இடத்தை வாங்கி விடுதி கட்டும் யோசனையில் இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.