ADVERTISEMENT

'ஜன.,3 ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு' - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

06:34 PM Oct 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதம் 5, 25, 26- ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேதியை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)


இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "69 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத்தேர்வு 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3- ஆம் தேதி முற்பகலில் நடைபெறும். குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் பதவிக்கான (12 காலிப்பணியிடங்கள்) தேர்வு 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9, 10- ஆம் தேதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT