குரூப் -1 தேர்வு முறைகேடு குறித்த புகார் வழக்குகளை உடனடியாக விசாரிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குரூப் -1 முறைகேடு குறித்து திருநங்கை யமுனா ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
எனவே, அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் புருசோத்தமன், பெருமாள் உள்ளிட்டோர் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 12- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாகத் தெரிவித்துள்ளது.