குரூப் -1 தேர்வு முறைகேடு குறித்த புகார் வழக்குகளை உடனடியாக விசாரிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குரூப் -1 முறைகேடு குறித்து திருநங்கை யமுனா ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

tnpsc group 1 exam issues chennai high court

Advertisment

Advertisment

எனவே, அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் புருசோத்தமன், பெருமாள் உள்ளிட்டோர் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 12- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாகத் தெரிவித்துள்ளது.