தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 30- ஆம் தேதி நடக்கயிருக்கிறது. அதன் பிறகு ஜனவரி 2- ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்படவுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பக்கம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். இதனால் பாப்பரம்பக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 2, 6 ஆவது வார்டுகளில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பக்கம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். இதனால் பாப்பரம்பக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 2, 6 ஆவது வார்டுகளில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Show comments