சமூகத்தில் பின்தங்கி இருந்தவர்களுக்கு காலங்காலமாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனை உடைத்தெறிந்துவிட்டு அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்கள் இவர்கள். அவர்களை சிறுமைப்படுத்தலாம் என்று நினைப்பவர்கள்தான் சிறுமைப்பட்டு போவார்கள். இந்த நூறு வருட காலத்தில்தான் பல மாற்றங்கள் நிகழ்த்துள்ளது. சாதியின் பெயரால் அடிமைப்பட்டு கிடந்த அவர்கள் இந்த கால கட்டத்தில்தான் மருத்துவராக, வழக்கறிஞராக, ஆசிரியர்களாக வந்தார்கள். இவ்வாறு மக்களின் முன்னேற்றத்துக்கு காரணமான அவர்களை அழிக்க நினைப்பது என்பது ஒருகாலும் வெற்றிபெறாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுவதும் போராடிய தலைவர்களின் தலையை சிதைப்பதன் மூலம் என்ன பெற்றுவிட போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆண்ட சாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். பள்ளிகளுக்கு சென்றீர்களா? அரசு வேலைக்கு போக முடிந்ததா? இதை எல்லாம் மாற்றியது யார்? நீங்கள் யார் தலையை வெட்ட துடிக்கிறீர்களோ அவர்கள் செய்ததுதான். சாதி பெருமை பேசும் நீங்கள் ஹெட்ரோ கார்பன் திட்டதை எதிர்த்து போராட தயாராக இருக்கிறீர்களா? மக்கள் பிரச்சனைகளில் அமைதியாக இருந்துவிட்டு தலைவர்களின் தலையை வெட்டுவதால் ஒன்றும் சாதிக்க முடியாது.