ADVERTISEMENT

“ஆணவக் கொலை ஒரு தேசிய அவமானம்” -நாடாளுமன்றத்தில் திருமாவளவன் உரை

06:06 PM Jul 01, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் ஆணவக் கொலைகளை எதிர்த்து உரையாற்றினார்.

ADVERTISEMENT

அப்போது தொல்.திருமாவளவன், “மிக முக்கியமான ஒரு பிரச்சனையை நான் இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இது ஒரு தேசிய அவமானம். Honour killing என்கிற ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் வேதனைப்பட கூடிய வெட்கப்பட வேண்டிய ஒரு குற்றச்செயல் ஆணவக் கொலை என்பதாகும். அண்மையில் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்சினி பிரியா என்கிற இளம்பெண்ணையும் அவள் திருமணம் செய்துகொண்ட கனகராஜ் என்கிற இளைஞனையும் கொடூரமாக அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறார்கள். சாதிகவுரவம் என்கிற வறட்டுக்கவுரவத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்ட உசுருபேண்டா என்னுமிடத்தில் பலமநேறி என்கிற நகரத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி என்கிற இரண்டு பேர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் இரண்டாண்டுகளுக்கு பிறகு அந்த பெண் பிறந்து 10 நாளான குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அந்த பெண்ணை கடத்திச் சென்று அவருடைய பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். இது நாள்தோறும் நாடு முழுவதும் நடந்து வருகிற ஒரு கொடூரமான குற்றச் செயலாகும்.

இதைப்பற்றி ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதை மட்டும் நான் படித்துவிட்டு என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன் “In 2018 supreme court in a historical verdict on honour killings said; “it can be stated without any fear of contradiction that any kind of torture or torment or ill-treatment in the name of honour that tatamount to atrophy of choice of an individual relating to love and marriage by any assembly, whatsoever nomenculture it assumes, is illegal and cannot be allowed a moment of existence.” It has issued some guidelines to both centre and states. On the direction of supreme court The Law Commission of India already submitted a bill named ‘Prohibition of Interference with Matrimonial Alliances In The Name of Honour and Tradition Bill’. It is still pending with the Central Government.

I request the government to take immediate steps to pass the Bill on Honour Killings submitted by The Law Commission of India. Thank You sir” எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT