Skip to main content

வேலூரில் 9 வயது சிறுமி காவல்துறையினரால் சித்திரவதை: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆணையிடவேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
Thirumavalavan

 

“அண்மையில் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள, காவல்துறையின் வன்கொடுமையும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவரென காவல்துறையினரால் தேடப்படும் காட்பாடியை சார்ந்த ஜானி என்பவரை கைது செய்ய இயலாத நிலையில், அவரது குடும்பத்தினரை கைது, சிறை, அவமதிப்பு என மிகமோசமான சித்திரவதைகளுக்குள்ளாக்கி வருகிறது வேலூர் - விருதம்பட்டு காவல் நிர்வாகம். 

 

ஜானியின் மனைவி, மகள், தாய், பெங்களூரில் வசிக்கும் சகோதரி, மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் மீதும் வன்முறையை ஏவியுள்ளது காவல்துறை. குறிப்பாக, அவரது மகளான ஒன்பது வயது சிறுமியையும் காவல் அதிகாரிகள் சித்திரவதைக்குள்ளாக்கி வருகிறார்கள் என்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.

 

விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் புகழ் என்பவரின் தலைமையில்தான் இத்தகைய அத்துமீறல்களும், சித்திரவதைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த மார்ச் மாதம் ஜானியின் மனைவி ஷாலினியை விருதம்பட்டு காவல் அதிகாரிகள் கைது செய்து மூன்று நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அவர் மீது எந்த வழக்குமில்லை. ஆனால், அவரைக் கைது செய்து கொடுமை இழைத்துள்ளனர். இந்த சித்திரவதையின்போது, ஒன்பது வயதான அவரது மகள் ஜெனிஷா எனும் சிறுமியும் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறார். கடந்த 2018ல் பதிவான வழக்கொன்றில் ஷாலினியை வேண்டுமென்றே இணைத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறது விருதம்பட்டு காவல் நிர்வாகம்.

 

நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் முன்னிலையில், தான் சட்டவிரோத காவல் சித்திரவதைகளுக்கு ஆளானதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள இயலாத காவல் அதிகாரிகள் ஷாலினியின் மீது மேலும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர், ஷாலினியின் ஒன்பது வயது மகள் ஜெனிஷாவை, அரசு சிறுவர் காப்பகத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார். 43 நாட்களுக்குப்பின்னர்,  உயர் நீதிமன்ற ஆணையின்படி, சிறுமி ஜெனிஷா மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இன்னும் அவரும், அவரது குழந்தையும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்படுவது தொடர்கிறது. காவல்துறையினரின் இத்தகைய அதிகார வரம்பு மீறல்களை- வன்கொடுமைகளை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

 

காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகியுள்ள ஷாலினி மற்றும் சிறுமி ஜெனிஷாவுக்கு நீதிகிட்டும் வகையில், இதனை உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.