Skip to main content

போலீசாருக்கு மிரட்டல் பேரணி; விசிக மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Threatening the police and rallying; Suspension of Vishik District Secretary

 

திருவண்ணாமலை மாவட்ட விசிக மாவட்டச் செயலாளரை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிர்புற வணிக வளாகத்தினுள் ஒரு கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மா.செ பகலவன் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். அந்த வணிக வளாகத்துக்கு பின்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் 3 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. அதில் ஒரு கடையை டெண்டர் வழியாக எடுத்து நடத்தி வருகிறார் சின்னக்கண்ணு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னகண்ணுவின் கடையின் சுவரை கட்சி அலுவலகத்தின் வழியாக உடைத்து அந்தக் கடையை ஆக்கிரமித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஒ.செ ரமேஷ் அதனைக் கட்சி அலுவலகத்தோடு இணைத்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியான சின்னகண்ணு ஆரணி நகர காவல் நிலையத்தில் பாஸ்கரன், ரமேஷ் உட்பட சிலர் மீது புகார் தந்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் வரவில்லையாம். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் விசாரணைக்கு வந்தவர், 'என்னையே விசாரணைக்கு அழைப்பியா?' என காவல்நிலையத்திலிருந்த எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசியவர், அவரின் சாதி பெயரைக் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதன் பின்னர் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார், கட்டடம் இடித்து ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஸ்கரன், ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போதே காவல் டெம்போ ட்ராவலரை முற்றுகையிட்டு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து மீண்டு நீதிபதி முன் நிறுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.

 

சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி பிணை கிடைத்தது. வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு மாலை, மரியாதை செய்து காரில் அவரை ஊர்வலமாக பந்தாவாக அழைத்து வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். ஆரணி நகரத்துக்குள் அனுமதி இல்லாமல் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். அப்போது மா.செ பாஸ்கரன் போலீசுக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் பின்பாட்டு குரல் எழுப்பினர். வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த ஆரணி நகர காவல் நிலையம் முன்பும் ஊர்வலமாக வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பினர். இதனை போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

 

காவல்துறையை படுமோசமாக விமர்சிக்கும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரண்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறை தலைமை கவனத்துக்கு சென்றுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விசாரித்துள்ளனர். காவல்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டவர்கள் என 50க்கு மேற்பட்டோர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட  விசிக செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பகலவன் கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இதற்கான அறிவிப்பினை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.