ADVERTISEMENT
ADVERTISEMENT
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. கஜா புயலால் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பொங்கல் பண்டிகையும் வருகிறது அதனால் இந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என்று பிரசாந்த் என்பவர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றம் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
Show comments