Skip to main content

தாயும் மகளும் மர்மமான முறையில் மரணம்..! அதிர்ந்துபோன பேரன்..! 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Mother and daughter passes away in thiruvarur

 

திருவாரூர் அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. உடல்களை மீட்டு கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விஷ்ணு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40), கணவனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். ஜோதியும் தமிழரசியும் தனியாக இருந்துவந்தனர். இவர்கள் ஜோதியின் அக்காள் மகன் முகிலன் 19 என்பவரை வளர்த்துவருகின்றனர். ஜோதி தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். 

 

இந்த நிலையில், இன்று (21.05.2021) மதியம் முகிலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜோதியும் தமிழரசியும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கியுள்ளனர். மேலும், வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்துள்ளது. பதறித்துடித்து உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்து, அவர்கள் மூலம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருவரது மரணம் கொலையா ? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.