Skip to main content

ஒரு நேரத்தில் இரண்டு வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

திருவாரூர் அருகே அதிமுக பிரமுகரும், ஊராட்சி மன்ற தலைவருமான ஒருவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவியின் கழுத்திலிருந்த தாலி சங்கிலி 7 பவுனை கொள்ளையடித்திருப்பது பெண்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பிலாவடி கிராமத்தின் மெயின் ரோட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவரது மனைவி ராணி, குடவாசல் வீட்டு வசதி சங்க இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

thiruvarur district thief police investigation

இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது விடியற்காலை அவரது வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர் உடைத்து தூங்கிக்கொண்டிருந்த ராணியின் கழுத்திலிருந்த  தாலிசங்கிலி 7 பவுனை அறுத்துள்ளனர். ராணியோ அலறியடித்துக்கொண்டு கூச்சலிட  அவரது கணவர் எழுந்து பார்த்தவுடன் ஜெயின் பறித்த மர்மநபர்கள் ஓடிவிட்டனர்.
 

உடனடியாக குடவாசல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தான். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராதாகிருஷ்ணனின் பக்கத்து வீடான ராஜேந்திரன் என்பவர் வீட்டிலும் 7 கிராம் மோதிரமும் 5500 ரூபாய் பணத்தையும் திருடிவிட்டே ராதாகிருஷ்ணனின் வீட்டில் கைவரிசையை காட்டியிருக்கின்றனர்.
 

ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளிலும் திருட்டு சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.