கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எடப்பாடி (சேலம்) 3 செ.மீ., மேட்டூர், காரைக்குடி (சிவகங்கை) 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஒடிஷா கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.