tamilnadu rains chennai regional meteorological centre

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அதேபோல், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரிமளம் (புதுக்கோட்டை) - 6 செ.மீ., வேடச்சந்தூர் (திண்டுக்கல்), தேவாலா (நீலகிரி) தலா 5 செ.மீமழை பதிவானது.

மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment