கரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே நிலைகுலைந்து சாமானிய மக்கள் அன்றாட உணவுக்கே வழியற்று கையேந்தி நிற்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்கிறார்கள் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதாலும், குற்றங்கள் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. வாகன விபத்துகள் குறைந்திருக்கிறது. கணவன்- மனைவிக்கு இடையே சண்டைகள் குறைந்திருக்கிறது. அடிதடி, கொலை வழக்குகளும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
பொருளாதாரத்தைச் சரி செய்ய எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கும்போது, மக்களை அழித்தொழிக்கும், நடுத்தர, ஏழ்மையான குடும்பங்களை வீதிக்குக் கொண்டுவரும் டாஸ்மாக் கடையைத் திறந்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவானது தவறான பாதைக்கு இட்டுச்செல்லும்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.