ADVERTISEMENT

தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனை- பல இடங்களில் கோஷ்டி மோதல்

10:34 AM Mar 28, 2018 | kalaimohan

தமிழகங்களில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு பரசீலனையின்போது அதிமுக, திமுக, அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT

நாகை மாவட்டம்- மயிலாடுதுறையில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

விழுப்பரம்- சங்கராபுரம் கூட்டுறவு தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணைபோவதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் சிவகங்கை மாவட்டம் -கன்னங்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மோதல் ஏற்பட்டது.

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி, கன்னியாகுமரி -தோப்பூர், ஈரோடு-வெள்ளி திருப்பூர் போல பல இடங்களில் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் நடைபெற்றதால் பரபரப்பு நிலவிவருகிறது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT