ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. தினமும் துறைவாரியான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அமைச்சர் கேன்.என். நேரு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை ஒன்றினைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளாக மாற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
Show comments