Skip to main content

அரிசி அத்தனையும் தொகுதி மக்களுக்கு கொடுங்க ! தடாலடியாக களத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

கரோனா வைரஸ் தாக்குல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் ஊரடங்கு உத்தரவு அடிப்படை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதாக பாதித்துள்ளது. இதனால் அரசியல்வாதிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழக அரசு ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் பொருட்கள் அத்தனையும் இலவசம் என்றும் கூடுதலாக 1000 ரூபாய் நிவாரண தொகையும் அறிவித்தது. 

 

   Corona virus protection - DMK kn nehru



நிவாரண தொகை 1000 ரூபாய் கிட்டதட்ட அனைவருக்கும் கிடைத்த நிலையில் ரேசன் பொருட்கள் மக்களிடம் சென்றடைவதில் பெரிய தேக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு அதிரடியாக களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கினார்.

இதையடுத்து கரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கருவிகள் வாங்குவதற்குத் தனது திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கியதுடன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கினார். 
 

nakkheeran app



இதையடுத்து கட்சியினர் கே.என். நேருவிடம், அரிசி இல்லாமல் மக்கள் வெகுவாக சிரமப்படுகின்றனர் என்ற கோரிக்கை வைக்க உடனே தனக்கு சொந்தமாக லால்குடியில் உள்ள அரிசி ஆலைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரிசி ஆலையில் விற்பனையை உடனே நிறுத்துங்கள், அத்தனை அரிசி மூட்டைகளையும் தொகுதி மக்களுக்கு கொடுங்கள் என்று அதிரடியாக உத்தரவு போட்டார்.  உடனே ஆலையில் இருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை வரவழைத்து அவர்கள் வார்டுகளில் எளியவர்களை அடையாளம் கண்டு குறைந்தது 1,000 பேர் முதல் அதிகபட்டமாக 1,500 பேர் வீதம் தலா ஒவ்வொருக்கும் 5 கிலோ வீதம் 35,000 பேருக்கு 1 லட்சத்து 50,000 கிலோ அரிசியை மொத்தமாக கலைஞர் அறிவாலயத்தில் அடுக்கி வைத்தார்.

முதல்கட்டமாக கலைஞர் அறிவாலயத்திலிருந்து திமுக பகுதி செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்களை வரவழைத்து ஒவ்வொருத்தருக்கும் இத்தனை வீடுகள் என ஒதுக்கி, அவர்கள் அனைவரின் வார்டுகளுக்கும் உட்பட்டவர்களுக்கு 5 கிலோ அரிசி என தலா 2500 கிலோ ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் மட்டும் திமுவில் 34 வட்ட செயலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொகுதி மக்களில் கிட்டதட்ட இந்த 35,000 பேருக்கு 40,000 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசிகளை தன்னுடைய சொந்த செலவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த அரிசி மூட்டைகளை கட்சி பொறுப்பாளர்கள் ஏற்கனவே கணக்கு எடுத்து வைத்திருந்த எளிய மக்களிடம் நேரடியாக தனித்தனியாக ஒவ்வொரு பொறுப்பாளரும் கொடுத்தனர். 

ஆளும் கட்சிக்கும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கும், ஒரு எதிர்கட்சியின் எம்.எல்.ஏ. தன் தொகுதி மக்களுக்கு எப்படி செய்ய முடியும் என்பதை சொல்லாமல் செய்து காட்டி உள்ளார் கே.என்.நேரு.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.