Skip to main content

ஒற்றை ஓட்டால் மாறிய வெற்றி, தோல்விகள்! - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ரவுண்ட் அப்

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Single-vote victory or defeat! - Detailed information on what happened in the urban local elections!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதேபோல், 90%- க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்து அ.தி.மு.க, பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் குறிப்பிடத் தகுந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 

 

ஜனநாயக முறையில் மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒற்றை வாக்கும் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்திருக்கிறது இத்தேர்தலில். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றை வாக்கு ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியின் 9-வது வார்டில் ம.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி ராஜை விட, அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வன் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்செல்வன் 297 வாக்குகளும், அந்தோணி ராஜ் 296 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். 

 

Single-vote victory or defeat! - Detailed information on what happened in the urban local elections!

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியின் 8- வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் உமா ஒரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனாவைத் தோற்கடித்தார். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியின் 7- வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராஹிம் ஷா ஒரு வாக்குகூட பெறவில்லை. இந்த வார்டில் பிரித்வி ராஜா என்ற சுயேச்சை வேட்பாளர், 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அடுத்த இடத்தில் தி.மு.க. வேட்பாளர் 149 வாக்குகளைப் பெற்றார். 

 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பேரூராட்சியின் 11- வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நரேந்திரன் ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இங்கு தி.மு.க. வேட்பாளர் உமா சங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

 

மதுரை மாவட்டம், மேலூரில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்பை அகற்றக் கோரி பா.ஜ.க.வின் முகவர் கிரிநந்தன் பிரச்சனை கிளப்பிய 8- வது வார்டில் அந்த கட்சி வேட்பாளர் அம்சவேணி 10 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முகமது யாசின் 651 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்திய கிரிநந்தன் பா.ஜ.க. வேட்பாளர் அம்சவேணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Single-vote victory or defeat! - Detailed information on what happened in the urban local elections!

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியின் 19- வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நவாஸ் 146 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் முகமது உசேன் 145 வாக்குகளும் பெற்றதையடுத்து, தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

 

திருச்சி மாவட்டம், கூத்தைப்பார் பேரூராட்சியின் 7- வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நித்யா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 244 வாக்குகள் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கர்ணன் 243 வாக்குகள் பெற்று ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

 

திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியின் 8- வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் 3 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒரு வாக்கு பெற்றார். கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் 3- வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கோபிநாத் தி.மு.க. வேட்பாளரை விட ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.