ADVERTISEMENT

கனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

08:02 AM Nov 12, 2021 | sivarajbharathi

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12/11/2021) விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT