Skip to main content

சாத்தான்குளம் இரட்டைக் கொலை... வழக்கறிஞர்களிடம் சி.பி.ஐ அதிகாரி அழகிரிசாமி விசாரணை!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அந்நகர காவலர்களால் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை என்ற பெயரால் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 10 பேர்களால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டதில் நிலைகுலைந்து போன ஜெயராஜூம் பென்னிக்ஸ்சும், கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தது தேசத்தையே உலுக்கியது.

 

தாமாக முன் வந்து வழக்குப் பதிவிட்ட உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட, அதன் ஐ.ஜி. சங்கர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. யூனிட் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எஸ்.ஐ.க்கள் உட்பட 10 பேர்கள் கைதானர்கள். பின்பு இந்த வழக்கு சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்ட்டிற்கு மாற்றப்பட்டு அதன் ஏ.டி.எஸ்.பி.யான விஜயகுமார் சுக்லா தலைமையிலான போலீஸார் குற்றவாளிகள் 8 பேரைக் கஸ்டடி எடுத்து விசாரித்ததுடன் தொடர் விசாரணையாக சாத்தான்குளம் டூ கோவில்பட்டி வரை விசாரணையை நடத்தினர்.

 

இதனிடையே வழக்கை விசாரணை செய்துவரும் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 பேருக்குக் கரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் இருப்பதால், அடுத்து அதன் விசாரணை அதிகாரியான சி.பி.ஐ.யின் மதுரை டிடாட்ச்மெண்ட்டின் அழகிரிசாமி தலைமையிலான நான்கு போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று மதியம் 12.30 மணிவாக்கில் அழகிரிசாமி தலைமையிலான 4 அதிகாரிகள் சாத்தான்குளம் வந்தனர். அங்கேயுள்ள பென்னிக்ஸ்சின் வழக்கிறிஞரான மணிமாறனின் அலுவலகத்திற்கு வந்து அவரை விசாரித்தனர்.

 

பென்னிக்ஸ் தன் தந்தையைப் பார்க்க காவல் நிலையம் சென்ற பிறகு அவரது வழக்கறிஞரான மணிமாறன் அங்கு போயிருக்கிறார். சம்பவம் நடந்த போது அங்கு இருந்ததால், நடந்தவைகளை பார்த்த அவர், ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.யினரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் எப்படி இருந்தார்கள். யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் என்றெல்லாம் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தின் போது வேறு மனு தொடர்பான விசாரணைக்காக அங்கிருந்த ரவிச்சந்திரன் ராஜாராம் இரண்டு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு தன் நண்பர் சங்கரலிங்கத்துடன் சென்றிருக்கிறார். அவர், மற்றும் நண்பர்களான ரவிசங்கர், சுடலை முத்து ஆகியோரிடமும் விசாரணையை நடத்தியிருக்கிறார் சி.பி.ஐ.யின் அழகிரி சாமி.

 

அடுத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட ஜெயராஜையும், பென்னிக்சையும் போலீசார் கோவில்பட்டி சிறையிலடைப்பதற்காக வாடகைக் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் டிரைவரான நாகராஜிடம், ஜெயராஜ் பென்னிக்ஸ் எப்படிப்பட்ட நிலையிலிருந்தார்கள். ரத்தக்கறைகளிருந்தனவா. இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று போலீசார் மிரட்டினார்களா? என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனராம்.

 

http://onelink.to/nknapp

 

இதுபோன்ற விசாரணை சுமார் நான்குமணி நேரத்திற்கும் மேலாக நடத்திருப்பதாகத் தெரிகிறது. விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு வாரமே இருக்கும் நிலையில் சாத்தான்குளம் கொட்டடிக் கொலை விசாரணை, விறு விறுப்பான நிலையை எட்டியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.