ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு... அரசு மருத்துவரிடம் விசாரணை...

05:09 PM Jul 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

ADVERTISEMENT

இந்த வழக்கில் 15 நாட்கள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா தற்பொழுது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ஆகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT