ADVERTISEMENT

அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்!!! மணல் கொள்ளையர்கள் 11 பேர் மீது குண்டாஸ் வழக்கு...

09:57 AM Sep 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காவிரியில் வெள்ளம் குறைந்தவுடனே காவிரி படுகையில் மணல் கொள்ளை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வேன்களில், பத்தாளபேட்டை வேன்களில் மணல் கடத்துவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அதன் பெயரில் வி.ஏ.ஓ.கிருஷ்ணசமூத்திரம் சுப்பிரமணி, பத்தாளபேட்டை செல்வகணேஷ், ஆகியோரின் பிக்கப்வேன்கனை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ய முயன்ற போது..தகாரு ஏற்பட்டது. பிரச்சனை அதிகமாகிறது என தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் அண்ணாதுரை, ஆர்.ஐ. யோகராஜன், சென்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

வண்டிகளை பறிமுதல் செய்தது திருவரம்பூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர்.

இதை அடுத்து அதிரடியாக இதற்கு முன்பு மணல் கொள்ளையடித்து பிடிபட்ட அந்த பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் உள்ளிட்ட 11 பேர் மீண்டு குண்டாஸ் வழக்கு பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு சிபாரிசு செய்தனர்.. தொடர் மணல் கொள்ளையர்கள் மீது குண்டாஸ் வழக்கு சிபாரிசு செய்தது.. தற்போது குண்டாஸ் வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் மணலை கடத்தியவர்களே ஆனால் இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகளுக்காக தான் நெடு நாட்களாக கடத்தி வருகிறார்கள் தற்போது இவர்கள் மீது விழுந்த குண்டாஸ் வழக்கு அரசியல்வாதிகள் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்து விடுமோ என்கிற பயம்.. மணல் திருடுபவர்கள் மத்தியில் ஏற்றுபட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT