Skip to main content

விடிய விடிய மணல் கடத்திய மாபியா கும்பல் கைது!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள வேப்பூர் பகுதியில் இரவு நேரங்களில் விடிய விடிய மணல் கடத்துவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து மணல் கடத்தல் கும்பலை கையும் களவுமாக பிடிக்க டெல்டா பிரிவு போலீசாருக்கு எஸ்.பி உத்தரவு பிறப்பித்தார்.

அதையடுத்து மணல் கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக கடந்த 15 நாட்களாக வேப்பூர் - ஐவதுகுடி பகுதியில் டெல்டா எஸ்.ஐ நடராஜன் தலைமையில் போலீசார் ரகசியமாக முகாமிட்டிருந்தனர். நேற்று இரவு மணிமுத்தாற்றிலிருந்து ஐவதுகுடி வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏறுவதற்காக வந்த மணல் லாரிகளை மடக்கி பிடித்தனர் போலீசார்.

 

 


அவர்களிடம் விசாரித்ததில் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் மணல் கடத்தல் கும்பலின் தலைவன் மணிசேகர், லாரி உரிமையாளர் குமரேசன், லாரி டிரைவர்கள் மணிகண்டன், சக்திவேல், கதிர்வேல், மாயவேல், கமலக்கண்ணன், ரமேஷ் ஆகிய 8 பேரையும், மணல் கடத்திய ஆறு லாரிகள், பொக்லைன் இயந்திரங்களையும் டெல்டா போலீசார் பிடித்து வேப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்து, பின்னர் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். 
 

இந்த மணல் கடத்தல் கும்பலின் தலைவர் மணிசேகர் விழுப்புரம் மாவட்டம் கூத்தக்குடியை சேர்ந்தவன். இவன் கடலூர் மாவட்டத்தில் பாயும் மணிமுத்தாறு, விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் கோமுகி ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகரித்ததால் மணல் கடத்தல் தொழிலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், சென்னை என பரவலாக விரிவுபடுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவுடன், காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் 'தில்'லாக மணல் திருடியுள்ளான்.

 

 


ஐவதுகுடி அருகே மணிமுத்தாற்றங்கரை ஒரமாக பாஸ்கர் என்பவருக்கு சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலங்களை குத்தகைக்காக வாங்கியுள்ளான். குத்தகைக்கு வாங்கிய நிலத்தின் அடியில் ஆற்று மணல் கிடைக்கவே அதை விற்பனை செய்ய முடிவெடித்து உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து விட்டு இரவு நேரங்களில் மணல் கடத்தியுள்ளான். 

 

 

 

மணல் கடத்தலை பிடிப்பதற்காக முகாமிட்ட டெல்டா பிரிவு போலீசாரிடம் மாட்டிக்கொண்டது மணிசேகர் கும்பல். அதேசமயம் மணிசேகரை எப்படியாவது வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து கட்சியினரும் காவால்துறையிடம் சிபாரிசு செய்துள்ளனர். உள்ளூர் போலீசாரும் காப்பாற்றுவதற்காக கூடுமானவரை முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் மாவட்ட தலைமையிடத்து போலீசார் தலையீட்டால் வேறு வழியின்றி வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர்.

 

 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.