Skip to main content

அதே தேதி;தலைமை முதல்வர்தான்;மணப்பெண் தேடி ஊர்சுற்றும் எம்.எல்.ஏ மாப்பிளை!!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி தொகுதி) அதிமுக எம்.எல்.ஏவான ஈஸ்வரன் திருமணத்திற்காக முன்பு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சந்தியா எம்.எல்.ஏவை பிடிக்கவில்லை என்றும் அவருக்கு தன் அப்பா வயது ஆகிறது என்றும் இந்த திருமணம் வேண்டாம் என்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு கோபிசெட்டிபாளையம் போலீசார் சந்தியாவை மணப்பாறையில் கண்டுபிடித்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சந்தியா எம்.எல்.ஏவை  திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை என நீதிபதியிடம் கூறினார். பிறகு சந்தியாவை அவரின் பெற்றோரிடமே செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

 

mla

 

 

 

இப்படி எம்.எல்.ஏ நிச்சயம் செய்த மணப்பெண் சந்தியா விவரகாரம் முடிவுக்கு வர  இதைத்தொடர்ந்து முன்பே முடிவுசெய்யப்பட்ட 12/9/2018 அன்று திருமணத்தை நடத்துவது என தீவிரமாக களமிறங்கிய மணமகன் எம்.எல்.ஏ ஈஸ்வரன் மணப்பெண் தேடி ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் களமிறக்கினார். கடந்த மூன்று நான்கு நாட்களாக 20-க்கும் மேற்பட்ட மணப்பெண் விவரங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வரன்களை திருமணம் செய்ய எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில் அதற்கு காரணம் பல வரன்கள் பெண்ணக்கு 20 வயது என்றும் சில வரன்கள் ஏற்கனவே திருமணம் ஆகி  விவாகரத்து பெற்ற வரன்கள் என்றும் தெரியவருகிறது.

 

இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரன் எங்காவது 30 வயதுகொண்ட பெண்ணை சீக்கிரமாக பாருங்கள் என தனது உறவினர்களை வேகப்படுத்திவருகிறார். ஏன் இப்படி ஆவசரப்படுத்துகிறீர்கள் அதுதான் நாளாகி போச்சே கொஞ்சம் பொறுமையாகவே திருமணம் செய்யலாமே  என அவரது சொந்தகாரர்கள் கூற முடியவே முடியாது நான் திட்டமிட்ட படி 12-ஆம் தேதி ஏதோவொரு பெண்ணை திருமணம் செய்வேன். என் திருமணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் எனகூறியிருக்கிறார் ஈஸ்வரன். 

 

 

 

திருமணத்திற்கு ஒரு வாரம்கூட இல்லாத நிலையில் மணமகன் ஈஸ்வரன் தாலிகட்ட தயாராக இருக்கிறார் ஆனால் அந்த தாலியை கட்டிக்கொள்ளும் ,மணமகள்தான் யார் என்று தெரியவில்லை. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து எம்.எல்.ஏ ஈஸ்வரனிடம் 12-ஆம் தேதி பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் உண்டா? என கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஈஸ்வரன் கட்டாயமாக  உண்டு என பதில் கூறியிருக்கிறார். திரும்பவும் முதல்வர் அலுவலகம் மணப்பெண் யார் என கேட்க அதற்கு ஈஸ்வரன் திருமணத்திற்கு முன் 11-ஆம் தேதி யார் மணப்பெண் என்பதை தெரியப்படுத்துவேன் என கூறியிருக்கிறார். 43 வயதான எம்.எல்.ஏ மணமகன் ஈஸ்வரன்  தனக்கான துணையை தேடி அதி தீவிரமாக அள்ளும் பகலும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.